ஆசியாவில் 4.83 லட்சம் பேருக்கு கொரோனா
ஆசியாவில் கொரோனா பாதிப்பு 4.83 லட்சமாக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 17,575 ஆனது.
ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளை துவம்சம் செய்து வரும் கொரோனாவின் பாதிப்பு, ஆசியாவில் 4.83 லட்சமாக அதிகரித்தது.
ஆசியாவில் புதிதாக 10,786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 332 பேர் பலியாகினர்.
இதனையடுத்து மொத்த பாதிப்பு 4,83,053 ஆகவும், மொத்த பலி 17,575 ஆகவும் அதிகரித்தது.
துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்தது.
ஆசியாவில் அதிக பாதிப்புகளை துருக்கி (1,12,261), இரான் (91,472), சீனா (82,830) நாடுகள் சந்தித்துள்ளன.
இந்தியாவில் புதிதாக 58 பேர் பலியானதையடுத்து மொத்த பலி 939 ஆக உயர்ந்துள்ளது.
1,561 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 29,451 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் 13,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 292 பேர் உயிரிழந்துள்ளனர்.
COMMENTS