திருச்சியில் நடமாடும் தள்ளுவண்டி காய்கறி கடைகளை ஆணையர் சிவசுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி மூலம் நடமாடும் தள்ளுவண்டி காய்கறி கடைகள் இன்று முதல் தொஇடங்கப்பட்டது.
இதனை ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்றும் நாளையும் காய்கறிக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருச்சி மாநகர், புறநகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் , பழக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைக்க மாநகரம் முழுவதும் 65 வார்டுகளிலும் வார்டு ஒன்றுக்கு ஒரு தள்ளுவண்டியில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நடமாடும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நடமாடும் காய்கறி தள்ளுவண்டிகளில் செல்லும் மாநகராட்சி பணியாளர்கள் கையுறை, முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு விற்பனை செய்கிறார்கள்.
காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நடமாடும் காய்கறிக் கடைகள் பெரும் பயனாக இருப்பதாக மாநகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
COMMENTS