*கோடைகால வானிலை அறிக்கை:*
*சித்திரையில் புயல் உருவாகும்!*
தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் வெப்பநிலை அதிகரித்தது உள்மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை 40°செல்சியஸை தாண்டியது. அதேபோல் பல மாவட்டங்களில் ஏப்ரல் 5 முதல் 10 வரை பரவலாக மழை பெய்தது.
அடுத்த 4-5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பசலன மழை குறைந்து காணப்படும்.
*சித்திரையில் மழை வாய்ப்பு!*
இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த இரு வாரங்களுக்கு இயல்பைவிட சற்று குறைந்தே காணப்படும்.
உள் மாவட்டங்களில் வெப்பநிலை 37°செல்சியஸ் முதல் 39°செல்சியஸ் வரையிலும், ஒரிரு இடங்களில் 40°/41° செல்சியஸ் வரை பதிவாகும்.
ஏப்ரல் நான்காவது வாரம் முதல் தமிழகத்தின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 15/20ம் தேதி வரை தமிழகத்தில் அவ்வப்போது கோடைகால மழை எதிர்ப்பார்க்கலாம். குறிப்பாக மேற்குதொடர்ச்சிஒட்டிய மலை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் இவ்வருடம் சித்திரை முதல் வைகாசி மாத முதல் பத்து தினங்களுக்குள் மழை வாய்ப்பு உள்ளது.
இந்திய பெருங்கடலின் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், மழை வாய்ப்புக்கான அலைவு இம்மாத இறுதி அல்லது மே முதல் வாரத்தில் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வர வாய்ப்பு.
கடல் சார்ந்த அலைவும், கடல் வெப்பமும் சாதகமாக அமையும் காரணத்தால் தென்மேற்கு வங்ககடலில் ஏப்ரல் இறுதி முதல் மே இரண்டாவது வாரத்திற்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது.
பொதுவாக கோடைகால புயல்கள் தமிழகம் நோக்கி நகர்வது அரிது என்றாலும் இவ்வருடம் உருவாகும் உருவாகும் தாழ்வு பகுதி தமிழக கடற்கரை அருகே வந்து பரவலாக நல்ல கனமழை தர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதில் கடலோர மாவட்டமும் பெரிதாக பயன்பெறும்.
சித்திரையில் காற்று சுழற்சி ஏற்பட்டு வெப்பசலன மழையை பரப்பளவையும், அளவையும் அதிகரிக்கும்.
இந்த கோடைக்கால புயல் ஏற்பட்டு ஒரிரு நாட்கள் மழையை தந்து தமிழகத்திற்கு வடக்கே சென்ற பிறகு அல்லது வலுவிழந்த பிறகு கோடை வெப்பம் உச்சத்தை தொட்டு மாநிலம் முழு வறண்ட வானிலை தொடங்கும்.
நன்றி: தமிழ்நாடு வெதர்மேன்
COMMENTS