ஓரிரு நாளில் அனைவரும் டிஸ்சார்ஜ்; பச்சை மண்டலமாகிறது குமரி
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஐந்து பேர் குணமாகி வீட்டுக்கு சென்று விட்டனர். மேலும் இரண்டு பேர் குணமானாலும் குடும்பத்தினர் குணமடைவதற்காக மருத்துவமனையிலேயே காத்திருக்கின்றனர்.இந்நிலையில் மேலும் மூன்று பேருக்கு சிகிச்சைக்ப்பின் எடுக்கப்பட்ட முதல் ரத்த பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. இரண்டாவது பரிசோதனையிலும் நெகட்டிவ் வந்தால் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஆறாக குறையும். இவர்களும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் மூன்றாம் தேதிக்கு பின்னர் குமரி மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
COMMENTS