மேதின வாழ்த்துக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மெக்கானிக் தொழிலாளர்கள்.!!
அழுக்கு சட்டையும் ஆயில் கரை படிந்த இவற்றுக்கு சொந்தக்காரர்களான மெக்கானிக்குகளின் மனக்குமுறல்கள் மற்றும் மே தின வாழ்த்துக்கள்!! எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி தனது குடும்பத்தோடு காரில் சென்றுகொண்டு இருக்கும்போது ஏதோ வது மெக்கானிக் செல் நம்பர் தான் அவர்களும் இரவு பகல் பாராது வந்து காரை சரி பண்ணித் தருவார்கள் வாகனம் எந்த இடத்தில் நின்றாலும் எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொழில் ஒன்றே கவனமாக எடுத்துக்கொண்டு அங்கேயே காரின் கீழே படுத்து சரி செய்வார்கள் இதுதான் மெக்கானிக் தர்மம் நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து பிழைப்பவர்கள் அதிகமாக உள்ளனர் அவர்களின் திகம் படித்தவர்களும், படிக்காதவர்களும் பிழைப்பு நடத்தக்கூடிய அனுபவத்தொழிலாக உள்ளது பெரும்பாலும் இந்த தொழிலாளர்கள் காலையில் காப்பி குடித்தவுடன் வேலையை துவங்கி இரவு வரை வேலை பார்த்தாலும் பெரிய வருமானம் ஒன்றும் பார்த்து விட முடியாது கோடிக்கணக்கு மதிப்பில் உள்ள கார்களை பழுது பார்த்தாலும் மெக்கானிக்கின் வாழ்க்கை தரம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதே உண்மை புதுக்கோட்டையில் காந்தி நகர், போஸ் நகரில் கார் பழுது நீக்கும் தொழில் செய்பவர்கள் அதிகமாக உள்ளனர் இந்தத் தொழிலில் மெக்கானிக், டிங்கரிங்,எலக்ட்ரிஷன், டோர் மெக்கானிக், ஏசி மெக்கானிக், சீட் லைனர், டயர் பஞ்சர் போன்று தனித்தனி பிரிவில் தொழிலாளர் உள்ளனர் ஆயில் கரை போவதற்கு ரொம்ப நேரம் கை கழுவ வேண்டும் முதலில் கெரோசின் அதன் பிறகு சோப்பு போட்டு கை கழுவி உணவு சாப்பிட வேண்டும் அதன் காரணமாக சிலபேர் உணவு உண்பதை மதியநேரங்களில் தவிர்த்து விடுவார்கள் இன்றைக்கு ஆயில் கம்பெனிகள், மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், பேட்டரி கம்பெனிகள், டயர் கம்பெனிகள், போன்றுவிற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 5 கோடியில் இருந்து பத்து கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுவதாக கூறுகிறார்கள் இவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு நான்கு சக்கர பழுது நீக்கும் தொழிலாளர்கள் தான் என்பது உண்மை இந்த நேரத்தில் எங்களைக் கண்டு கொள்ளவில்லை என்று மனம் குமுறுகிறார்கள் மேலும் ஊரடங்கால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கின்றோம் வேறு தொழிலாளர்களுக்கு வசதி மிக்கவர்கள் தன்னார்வலர்கள் உதவி செய்து கொண்டுள்ளனர் எங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடமும் தன்னார்வலரிமும் கோரிக்கை வைத்து உள்ளனர் தொழிலாளர்கள் தினமான மே 1 அன்றாவது எங்கள் வாழ்வாதாரம் செழிக்குமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்
நன்றியுடன் மோகன்ராஜ்
COMMENTS