பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகரில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் ஜெ.ஜெ. நகர் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் நலிந்தோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி
வட்டாசியர் திருநாவுக்கரசு, திமுக ஒன்றியசெயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன் ஆகியோர் அரிசி, காய்கறிகள் என 200 நபர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி துவக்கி வைத்தனர். இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி, காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம அலுவலர் ரமேஷ், சிக்கந்தர், காளிதாஸ், விகாஷ், தட்சிணாமூர்த்தி, ஊராட்சி தலைவர் கீதா சோலையப்பன், துணைத் தலைவர் சாமிநாதன், ஜெ.ஜெ.நகர் தொழிலதிபர்கள் ராமனாதன், ரவி, ஜெயராஜ், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் ஜெ.ஜெ. நகர் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் நலிந்தோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி
வட்டாசியர் திருநாவுக்கரசு, திமுக ஒன்றியசெயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன் ஆகியோர் அரிசி, காய்கறிகள் என 200 நபர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி துவக்கி வைத்தனர். இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி, காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம அலுவலர் ரமேஷ், சிக்கந்தர், காளிதாஸ், விகாஷ், தட்சிணாமூர்த்தி, ஊராட்சி தலைவர் கீதா சோலையப்பன், துணைத் தலைவர் சாமிநாதன், ஜெ.ஜெ.நகர் தொழிலதிபர்கள் ராமனாதன், ரவி, ஜெயராஜ், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
COMMENTS