மதுரை, மே.29–
மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக கடந்த 2 நாட்களில் முகக்கவசம் அணியாத 406 நபர்களிடம் 40 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பணிபுரிறும் இடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் கமிஷனர் விசாகன் உத்தரவின்படி உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களில் ஆய்வு மேற்கொண்டு முகக் கவசம் அணியாத மண்டலம் எண்.1க்குட்பட்ட பகுதிகளில் 46 நபர்களிடம் 4 ஆயிரத்து 600 ரூபாயும், மண்டலம் எண்.2க்குட்பட்ட பகுதிகளில் 66 நபர்களிடம் 6 ஆயிரத்து 600 ரூபாயும் மண்டலம் எண்.3க்குட்பட்ட பகுதிகளில் 90 நபர்களிடம் 9 ஆயிரம் ரூபாயும், மண்டலம் எண்.4க்குட்பட்ட பகுதிகளில் 204 நபர்களிடம் 20 ஆயிரத்து 400ரூபாயும் என மொத்தம் 406 நபர்களிடம் 40 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எனவே பொதுமக்கள் வெளியே வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணியுமாறும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும் மாநகராட்சி கமிஷனர் ச.விசாகன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
COMMENTS