காஞ்சீபுரம், மே 28 :-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 27 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கான அதிரடி நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி எடுத்தார்.
பெரிய காஞ்சீபுரம், சின்ன காஞ்சீபுரம், காஞ்சீ தாலுக்கா, பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையங்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட மணிமங்கலம் மற்றும் சோமங்கலம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 1.ராஜா என்கிற வசூல் ராஜா, 2.சந்துரு என்கிற சந்திரசேகர், 3.ஹரி என்கிற மார்க்கெட் ஹரி, 4.பரத், 5.தியாகு என்கிற தியாகராஜன், 6.ஜெய்சங்கர் (எ) சதீஷ்குமார் (எ) பெரியவா (25), 7. சதீஷ் (24), 8.யுகேஷ் (17), 9.யுவராஜ் (24), 10.பாலமுருகன்(23), 11.இன்பரசு (32), 12.சுரேஷ்குமார் (22), 13. தியாகு (எ) தியாகராஜன் (31), 14.சுரேஷ் (எ) மிலிட்டரி சுரேஷ் (40), 15. ராஜசேகர் (24), 16.பரத் (எ) கபாலி (22), 17.பிரேம்குமார் (22), 18.சீனிவாசன் (30), 19.ஜமால், 20.பிரபாகரன் (28), 21.வினோத் (எ) பொலபோலா(27), 22.கஜா (28), 23.பாபா(26), 24.விக்னேஷ் (25), 25.தனசேகரன் (34), 26.குமரன் (எ) புஷ்பநாதன்(35) 27.இளையராஜா ஆகிய 27 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தவிர மேலும் 12 ரவுடிகள் காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு குற்றச் செயல்களிலிருந்து திருந்தி, ஒழுக்கமாக வாழ எச்சரிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் ஓராண்டுக்கு எழுத்து மூலமாக நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சாமுண்டீஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
COMMENTS