புவனேஸ்வர், மே 29
கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.
ஒரிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா (வயது 72).இவர் 2 நாட்களுக்கு முன் 52 வயது நபரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அவரின் தலையை துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.அப்போது போலீசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரபலி கேட்டார். அப்படி செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என கூறினார்.கடவுளே சொன்னதால் தான் இப்படி செய்தேன் என கூறி உள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சன்சாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
COMMENTS