பொன்னமராவதி மே-29
பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சி வையாபுரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சியில் உள்ள வையாபுரியில் பொது இடங்கள், கோவில் பகுதிகள், கண்மாய் பகுதி குடிநீர் ஊரணி கரைப்பகுதிகளில் சுமார் 100 மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்கவுன்சிலர் பாண்டியன், அரசமலை ஊராட்சி துணைத்தலைவர் அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வேலு ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை ஊராட்சி பகுதிகளில் நட்டு வைத்தனர். மேலும் இதில் வையாபுரி கிராம ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரவி நன்றி கூறினார்.
படங்கள் மற்றும் செய்திகள் கீரவாணி அழகு இளையராஜா நிருபர் பொன்னமராவதி.
COMMENTS