நியூயார்க், மே 30–
அமெரிக்காவில் சில சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சண்டை தற்போது மொத்தமாக புதிய மோசமான நிலையை அடைந்துள்ளது. சீனாவை வெளிப்படையாக அமெரிக்கா எதிர்க்க தொடங்கி இருக்கிறது. கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று டிரம்ப் கூறி உள்ளார்.
உலக சுகாதார மையத்துடன் உறவை துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அதோடு சீனாவிற்கு எதிராகவும் அதிபர் டிரம்ப் இன்று கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அதிபர் டிரம்ப் தனது பேச்சில், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து சீனா மறைத்து விட்டது.
அமெரிக்காவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் சீனாவிடமும் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் குறித்து கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு பதில் அளிக்கவில்லை. அமெரிக்காவின் பங்கு சந்தையில் இருக்கும் சீனா நிறுவனங்களை கண்காணித்து வருகிறோம். அந்த நிறுவனங்கள் அமெரிக்க விதிக்கு எதிராக செயல்பட்டால் அந்த நிறுவனம் மீது தடை விதைக்கப்படும்.
அந்த நிறுவனங்களை மொத்தமாக கண்காணிக்க முடிவு செய்து இருக்கிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது அமெரிக்க சீனா மீது தொடுத்து இருக்கும் அறிவுபூர்வமான வர்த்தக யுத்தம் என்று கூறுகிறார்கள்.
COMMENTS