தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 47 ஆயிரம் பேர் கைது
சென்னை, மே 29–
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5 லட்சத்து 47 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்புப் பணியாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 9 மணி வரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் போக்குவரத்தை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டு 8 கோடியே 61 லட்சத்து 158 ஆயிரத்து 104 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் நேற்று (28–ந் தேதி) காலை 6 மணி முதல் இன்ற காலை 6 மணி வரையில் 144 தடை உத்தரவை மீறய குற்றத்திற்காக 502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 56 இருசக்கர வாகனங்கள், 33 ஆட்டோக்கள் மற்றும் 2 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 91 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
COMMENTS