புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும்
நிலையில் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்ற 1-ம்
தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கின்றது
அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2-மணி வரை மட்டுமே
திறக்க வேண்டும்
கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் மாஸ்க் மற்றும் கையுறை
அணிந்திருக்க வேண்டும்
கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக கடை முன் அடையாள
குறியீடு போட வேண்டும்
டீ கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2-மணி வரை மட்டுமே அனுமதி
கட்டாயம் சில்வர் டம்ளரோ, கண்ணாடி கிளாசோ பயன்படுத்தக்கூடாது
சில்வர் கோட்டிங் கப் பயன்படுத்தலாம்
ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு - 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க
வேண்டும். ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
கிடையாது. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்
மெடிக்கல், பால் விற்பனை மையம் மட்டும் வழக்கம் போல் செயல்படும்
குறிப்பு: கொரோனா தொற்று பரவுவதை தவிர்த்து நம்மை காத்துக் கொள்ள
நடவடிக்கை எடுக்கும் இது போன்ற காலகட்டத்தில் முக கவசம் அணியாமல்
வெளியே செல்வதையோ, தேவையில்லாமல் வெளியில்
சுற்றித்திரிவதையோ ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதையோ தவிர்க்க
வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது
COMMENTS