1693 : லண்டனில் பெண்களுக்காக முதன் முதல் தி லேடிஸ் மெர்குரி எனும் வார இதழ் வெளிவர ஆரம்பித்தது.
1759 : கியூபெக் மீதான பிரிட்டனின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
1806 : பிரிட்டன் படையினர் புவெனஸ் அயர்ஸை கைப்பற்றினர்.
1887 : சிங்கப்பூரில் சிங்கை நேசன் எனும் வார இதழ் வெளிவர ஆரம்பித்தது.
1896 : ஜப்பான், சன்ரிக் எனும் இடத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 27,000 பேர் உயிரிழந்தனர்.
1905 : ரஷ்ய - ஜப்பான் போரின்போது பொத்தெம்கின் என்ற ரஷ்யப் போர்க் கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.
1941 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படைகள்
பியாஸ்டாக் நகரை பார்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.
ருமேனியா, யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது.
குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1950 : கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்ப தீர்மானித்தது.
1954 : சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
1957 : டெக்சாஸ் - லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1967 : உலகின் முதலாவது ஏடிஎம் லண்டன் என்பில்டில் அமைக்கப்பட்டது.
1973 : உருகுவே ஜனாதிபதி ஜிவான் மரியா போர்டாபெரி நாடாளுமன்றத்தை கலைத்து சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.
1974 : அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.
1976 : ஏர் பிரான்ஸ் விமானம் பாலஸ்தீன இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
1977 : ஜிபூட்டி பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 : முகமது அலி குத்துச் சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1980 : பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற 81 பேரும் உயிரிழந்தனர்.
1982 : கொலம்பியா விண்ணோடம் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது.
1988 : பாரிஸில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர்.
1991 : ஸ்லோவேனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யூகோஸ்லோவியா அதன் மீது படையெடுத்தது.
1998 : கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
2013 : சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
2014 : ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
COMMENTS