பொன்னமராவதி ஜூன்- 28
பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் மொத்தம் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் வடுகநாதன் சாலையில் மதுரையிலிருந்து வந்த ஒருவருக்கும், சென்னையிலிருந்து வந்த மேலைச்சிவபுரி ஊராட்சியை சேர்ந்த ஒருவருக்கும், தொட்டியம்பட்டி ஊராட்சியில் இருவருக்கும் என மொத்தம் நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை அரசமலை ஊராட்சியில் ஒருவருக்கும் பூக்குடி வீதியில் மூவருக்கும் என மொத்தம் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உள்ள நபர்கள் பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய பரிசோதனைகளை வழங்கி அவர்களை புதுக்கோட்டை இராணியார் மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்டு தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தூய்மைபடுத்தப்பட்டு வருகின்றது.
COMMENTS