சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன..?
கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக பொருட்களை வாங்கும் போது கடைகாரர்கள் கையுறை, முககவசம் ஆகியவை அணிவதில்லை என வரும் புகாரை தொடர்ந்து காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் கடைகளை சோதனை செய்து அவர்கள் வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் இப்படி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் அரசு அறிவித்திருந்தாலும், கடைகளுக்கு சீல் வைக்கபடுவதில்லை, ஏன் என்று கேட்டால் மேலிடத்து உத்தரவு என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிப்பதால், செய்வதறியது காவல்துறையினர் திகைத்து நிற்கிறார்கள். இது ஊரடங்கு காலம் தொடங்கி இன்று வரை சென்னையில் நடைபெறும் விபரீதமான விஷயம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு சென்னையில் செயல்படுத்தப்பட்ட போது, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சென்னை மாநகர்முழுவதும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆனால் அதிக பொறுப்பு இருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையரை எந்த இடத்திலும் தென்படவில்லை.
எப்போதும் வருவாய்துறைக்கு ஆதரவாக காவல்துறை செயல்படும். ஏனென்றால் protocol படி வருவாய்துறை ஏபிரிவிலும், காவல்துறை பி பிரிவிலும் வருகிறது. என்னத்தான் சென்னை தனது முழுகட்டுபாட்டில் காவல்துறை கொண்டு வந்தாலும், கொரோனா தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி சரியாக காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என கருத்து உலா வருகிறது.
கொரோனா காலம் முடியும் வரை காவல்துறையும், மாநகாரட்சியையும் இணைத்து ஒரே அதிகாரியின் கீழ் கொண்டு வர ஆலோசிக்க வேண்டிய தருணம் இது. சென்னையில் கொரோனா அதிகமாக தடுக்க கட்டுப்பாடு போட்டு பலன் இல்லை. இப்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனா காலம் முடியும் வரை சிறப்பினமாக மாநகராட்சி ஆணையருக்கு மேலான சிறப்பு அதிகாரி பொறுப்பை சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு இணைத்து தற்காலிகமாக பதவி வழங்கினால் நலமாக இருக்கும் என்பது சென்னையை பாதுகாப்பான நகரமாக விரும்புபவர்களின் வேண்டுகோள் மட்டுமல்ல விருப்பமும் கூட.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தான் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்துறை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளனர். உதாரணமாக பல மாநிலங்களில் தமிழகத்தை தவிர்த்து உள்துறை செயலாளர் பதவியில் ஐபிஎஸ் அதிகாரிகளே பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே இதையே உதாரணமாக கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
சென்னையின் நலன் கருதி
க.அசுதுல்லா
பத்திரிகையாளர்
COMMENTS