சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீநிமன்றத்திற்கு மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வந்தார். ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு எதிர்மனுதாரராக உள்ள வழக்குகளில் இவர் சென்னை உயரநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு இவர், இப்பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS