--> பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்தபெண் இன்ஸ்பெக்டர் | Whatsapp Useful Messages

பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்தபெண் இன்ஸ்பெக்டர்







பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்த
பெண் இன்ஸ்பெக்டர்..

🔲 சென்னை ஓட்டேரியில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 3 சகோதரிகளில் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் இறுதிச்சடங்கை சென்னை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் டீமே முன்னின்று செய்தது.

🔲 சென்னை ஓட்டேரி S.V.M நகரில் உள்ள பிளாட்பாரத்தில்
▫️ராஜேஸ்வரி (59),
▫️விஜயலட்சுமி(58),
▫️பிரபாவதி (57)
என மூன்று சகோதரிகள் தங்கியிருந்தனர். 

🔲 இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் உயிர் நேற்று காலை பிளாட்பாரத்திலேயே பிரிந்தது. அவரின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டுசெல்ல வழிதெரியாமல் அவரது சகோதரரிகளான விஜயலட்சுமியும், ராஜேஸ்வரியும் கதறி அழுது கொண்டிருந்தனர்.

🔲 அவ்வழியாகச் சென்றவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் பிரபாவதியின் சடலம் நீண்ட நேரமாக பிளாட்பாரத்திலேயே கிடந்தது. அதன் அருகில் சோகத்துடன் அவரின் சகோதரிகள் அமர்ந்திருந்தனர்.

🔲 இந்தத் தகவல் தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களுக்கு கிடைத்தது. உடனே, இன்ஸ்பெக்டர் தலைமையில் ▫️சப்-இன்ஸ்பெக்டர் மீனா,
▫️ஏட்டு பழனி,
▫️ஏட்டு ஜான்,
▫️ஏட்டு மேனகா,
▫️ஏட்டு குமரன், மற்றும்
காவலர் சிலம்பரசன்..
ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

🔲 அங்கு எலும்பும் தோலுமாக, கிழிந்த சேலை அணிந்தபடி பிரபாவதி கிடந்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன் போலீஸ்காரர்களை அனுப்பி...
▫️சேலை,
▫️சோப்,
▫️பூ,
▫️மாலை
என இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கிவரும்படி கூறினார்.

🔲 அந்தப் பொருள்கள் வந்ததும், அருகில் உள்ள வீட்டிலிருந்து தண்ணீரை குடங்களில் போலீஸ் டீம் கொண்டு வந்தது.

🔲 பிளாட்பாரத்திலேயே சேலை மறைவில் பிரபாவதியைப் பெண் போலீஸார் மற்றும் அங்குள்ள பெண்கள் சிலர் குளிப்பாட்டினர்.

🔲 பிறகு புதிய சேலை அணிவித்து, பிரபாவதியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை முன்னின்று போலீஸ் டீம் செய்தது. ஓட்டேரி மயானத்துக்கு பிரபாவதியின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

🔲 இதுகுறித்து தலைமைச்செயலக காலனி போலீஸார் கூறுகையில், ``இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். உயிரிழந்த பிரபாவதி மற்றும் அவரின் சகோதரிகளுக்கு பலமுறை உணவு வழங்கியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் வேலூரைச் சேர்ந்தவர்கள். சென்னை ஓட்டேரிக்கு வந்த இவர்கள் குப்பைகளைப் பொறுக்கி வாழ்ந்துவந்தனர்.

🔲 இந்தச் சமயத்தில்தான் ஊரடங்கால் மூன்று சகோதரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதனால் பசி, பட்டினியால் மூன்று பேரும் பாதிக்கப்பட்டனர்.

🔲 பிரபாவதி உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று, அவரின் இறுதிச்சடங்கை இன்ஸ்பெக்டர் தலைமையில் நாங்களே செய்தோம். 

🔲 ஆம்புலன்ஸ் மூலம் பிரபாவதியின் சடலத்தை ஓட்டேரி மயானத்துக்குக் கொண்டுசென்று இறுதி மரியாதை செலுத்தினோம். இன்ஸ்பெக்டர் முன்னின்று அனைத்தையும் செய்தார். 

🔲 மூன்று சகோதரிகளுக்கும் குடிசைமாற்று வாரியத்தில் வீடு உள்ளது. அந்த வீடு முழுவதும் குப்பைகளைச் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது அந்த வீட்டைச் சுத்தம் செய்து விஜயலட்சுமி, ராஜேஸ்வரியை தங்க வைத்துள்ளோம்" என்றனர்.

🔲 இறுதி சடங்கு முடிந்து இன்ஸ்பெக்டர் அங்கு இருந்து புறப்படுவதற்கு சகோதரியை இழந்த சகோதரிகள் ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறினார்.

🔲 அப்போது, `அம்மா நீங்க நல்லா இருக்கணும்’ என கண்ணீர்மல்க அவர்கள் கூறினர். அதைக்கேட்ட போலீஸாரின் கண்களும் கலங்கின. அதன்பிறகு, கொரோனா வைரஸ் குறித்த அறிவுரைகளைக் கூறிவிட்டு போலீஸ் டீம் அங்கிருந்து புறப்பட்டு, சென்றது. ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை போலீஸ் டீம் உடனடியாகச் செய்துகொடுத்தது.

🔲 இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸ் டீமின் இந்தச் செயலால் அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.

#நன்றி: #விகடன்_மின்னிதழ்.

💖 மனிதாபிமானத்துடன் இப்பணியை மனநிறைவாக செய்து அந்த ஆத்மாவின் ஷாந்திக்காகவும், சகோதரிகளின் சடங்குகளுக்காகவும்
இக்காரியத்தை செய்த 
#தலைமைச்_செயலக_காலனி #காவல்நிலையத்தின்_ஆய்வாளர் #மனிதகுல_மாணிக்கம்
#திருமதி_ராஜேஸ்வரி அவர்களுக்கும், அவர்தம் குழுவினரான...
▫️#சப்_இன்ஸ்பெக்டர்_மீனா,
▫️ #ஏட்டு_பழனி,
▫️ #ஏட்டு_ஜான்,
▫️ #ஏட்டு_மேனகா,
▫️ #ஏட்டு_குமரன், மற்றும்
#காவலர்_சிலம்பரசன்..
ஆகியோரின் சிறப்பான
மனிதாபிமானப் பணியினை பாராட்டி வணங்கி மகிழ்ந்து அனைவருக்கும் 

#எம்_சிரம்_தாழ்ந்த_நன்றிகளை
#தெரிவித்துக்_கொள்கிறோம்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6211,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2339,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்தபெண் இன்ஸ்பெக்டர்
பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்தபெண் இன்ஸ்பெக்டர்
பிளாட்பாரத்தில் உயிரிழந்த மூதாட்டி! இறுதிச்சடங்கில் கலங்கவைத்த பெண் இன்ஸ்பெக்டர்.. 🔲 சென்னை ஓட்டேரியில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 3 சகோதரிகளில் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் இறுதிச்சடங்கை சென்னை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் டீமே முன்னின்று செய்தது. 🔲 சென்னை ஓட்டேரி S.V.M நகரில் உள்ள பிளாட்பாரத்தில் ▫️ராஜேஸ்வரி (59), ▫️விஜயலட்சுமி(58), ▫️பிரபாவதி (57) என மூன்று சகோதரிகள் தங்கியிருந்தனர். 🔲 இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் உயிர் நேற்று காலை பிளாட்பாரத்திலேயே பிரிந்தது. அவரின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டுசெல்ல வழிதெரியாமல் அவரது சகோதரரிகளான விஜயலட்சுமியும், ராஜேஸ்வரியும் கதறி அழுது கொண்டிருந்தனர். 🔲 அவ்வழியாகச் சென்றவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் பிரபாவதியின் சடலம் நீண்ட நேரமாக பிளாட்பாரத்திலேயே கிடந்தது. அதன் அருகில் சோகத்துடன் அவரின் சகோதரிகள் அமர்ந்திருந்தனர். 🔲 இந்தத் தகவல் தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களுக்கு கிடைத்தது. உடனே, இன்ஸ்பெக்டர் தலைமையில் ▫️சப்-இன்ஸ்பெக்டர் மீனா, ▫️ஏட்டு பழனி, ▫️ஏட்டு ஜான், ▫️ஏட்டு மேனகா, ▫️ஏட்டு குமரன், மற்றும் காவலர் சிலம்பரசன்.. ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். 🔲 அங்கு எலும்பும் தோலுமாக, கிழிந்த சேலை அணிந்தபடி பிரபாவதி கிடந்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன் போலீஸ்காரர்களை அனுப்பி... ▫️சேலை, ▫️சோப், ▫️பூ, ▫️மாலை என இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கிவரும்படி கூறினார். 🔲 அந்தப் பொருள்கள் வந்ததும், அருகில் உள்ள வீட்டிலிருந்து தண்ணீரை குடங்களில் போலீஸ் டீம் கொண்டு வந்தது. 🔲 பிளாட்பாரத்திலேயே சேலை மறைவில் பிரபாவதியைப் பெண் போலீஸார் மற்றும் அங்குள்ள பெண்கள் சிலர் குளிப்பாட்டினர். 🔲 பிறகு புதிய சேலை அணிவித்து, பிரபாவதியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை முன்னின்று போலீஸ் டீம் செய்தது. ஓட்டேரி மயானத்துக்கு பிரபாவதியின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 🔲 இதுகுறித்து தலைமைச்செயலக காலனி போலீஸார் கூறுகையில், ``இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். உயிரிழந்த பிரபாவதி மற்றும் அவரின் சகோதரிகளுக்கு பலமுறை உணவு வழங்கியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் வேலூரைச் சேர்ந்தவர்கள். சென்னை ஓட்டேரிக்கு வந்த இவர்கள் குப்பைகளைப் பொறுக்கி வாழ்ந்துவந்தனர். 🔲 இந்தச் சமயத்தில்தான் ஊரடங்கால் மூன்று சகோதரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதனால் பசி, பட்டினியால் மூன்று பேரும் பாதிக்கப்பட்டனர். 🔲 பிரபாவதி உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று, அவரின் இறுதிச்சடங்கை இன்ஸ்பெக்டர் தலைமையில் நாங்களே செய்தோம். 🔲 ஆம்புலன்ஸ் மூலம் பிரபாவதியின் சடலத்தை ஓட்டேரி மயானத்துக்குக் கொண்டுசென்று இறுதி மரியாதை செலுத்தினோம். இன்ஸ்பெக்டர் முன்னின்று அனைத்தையும் செய்தார். 🔲 மூன்று சகோதரிகளுக்கும் குடிசைமாற்று வாரியத்தில் வீடு உள்ளது. அந்த வீடு முழுவதும் குப்பைகளைச் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது அந்த வீட்டைச் சுத்தம் செய்து விஜயலட்சுமி, ராஜேஸ்வரியை தங்க வைத்துள்ளோம்" என்றனர். 🔲 இறுதி சடங்கு முடிந்து இன்ஸ்பெக்டர் அங்கு இருந்து புறப்படுவதற்கு சகோதரியை இழந்த சகோதரிகள் ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறினார். 🔲 அப்போது, `அம்மா நீங்க நல்லா இருக்கணும்’ என கண்ணீர்மல்க அவர்கள் கூறினர். அதைக்கேட்ட போலீஸாரின் கண்களும் கலங்கின. அதன்பிறகு, கொரோனா வைரஸ் குறித்த அறிவுரைகளைக் கூறிவிட்டு போலீஸ் டீம் அங்கிருந்து புறப்பட்டு, சென்றது. ராஜேஸ்வரி, விஜயலட்சுமிக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை போலீஸ் டீம் உடனடியாகச் செய்துகொடுத்தது. 🔲 இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸ் டீமின் இந்தச் செயலால் அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ந்தனர். #நன்றி: #விகடன்_மின்னிதழ். 💖 மனிதாபிமானத்துடன் இப்பணியை மனநிறைவாக செய்து அந்த ஆத்மாவின் ஷாந்திக்காகவும், சகோதரிகளின் சடங்குகளுக்காகவும் இக்காரியத்தை செய்த #தலைமைச்_செயலக_காலனி #காவல்நிலையத்தின்_ஆய்வாளர் #மனிதகுல_மாணிக்கம் #திருமதி_ராஜேஸ்வரி அவர்களுக்கும், அவர்தம் குழுவினரான... ▫️#சப்_இன்ஸ்பெக்டர்_மீனா, ▫️ #ஏட்டு_பழனி, ▫️ #ஏட்டு_ஜான், ▫️ #ஏட்டு_மேனகா, ▫️ #ஏட்டு_குமரன், மற்றும் #காவலர்_சிலம்பரசன்.. ஆகியோரின் சிறப்பான மனிதாபிமானப் பணியினை பாராட்டி வணங்கி மகிழ்ந்து அனைவருக்கும் #எம்_சிரம்_தாழ்ந்த_நன்றிகளை #தெரிவித்துக்_கொள்கிறோம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpbiWrTXfjGLpgoWre_Phyte3XdXXWnBeGIYEYr1jaux_kAw71oRdZkuW6DtBqR_95eV4QFM40SUsOWcWAluE8n5rrBbK9SM89eQ0jt-O8Kcu1bJMEq7qSZXdHZkksR1UYtW_3x0f2fcs/s1600/1593226590514426-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpbiWrTXfjGLpgoWre_Phyte3XdXXWnBeGIYEYr1jaux_kAw71oRdZkuW6DtBqR_95eV4QFM40SUsOWcWAluE8n5rrBbK9SM89eQ0jt-O8Kcu1bJMEq7qSZXdHZkksR1UYtW_3x0f2fcs/s72-c/1593226590514426-0.png
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/06/blog-post_577.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/06/blog-post_577.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content