தமிழகத்தில் காற்று மாசு குறைந்தது..
சென்னை, ஜூன் 18-
ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 3 மாதமாக காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதாலும் காற்று மாசுபாடு பெருமளவில் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்றைய காற்று மாசு அளவு 54 ஆக உள்ளது. அதேவேளை, பெருங்குடியில் 19 என்ற அளவிலும் கும்மிடிப்பூண்டியில் 74 என்ற அளவிலும் உள்ளது. தூத்துக்குடியில் 64 என்ற அளவில் உள்ளது. நேற்றைய தினம் பெருங்குடியில் 20 என்ற அளவிலும், கோயம்பேட்டில் 54 என்ற அளவிலும், கும்மிடிப்பூண்டியில் 69 என்ற அளவிலும், தூத்துக்குடியில் 60 என்ற அளவிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு 10- முதல் 50 வரை இருந்தால் சிறப்பானது என்றும் 100 வரை திருப்திகரமானது என்பதும் 100 முதல் 200 வரை என்பது நடுத்தரமானது என்றும் அதற்கு மேல், காற்று மாசு மோசம் என்று பொருள்படும்
COMMENTS