1 கிலோ பசுஞ்சாணம் ரூ 1.50க்கு வாங்க சத்தீஸ்கர் அரசு திட்டம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பசுஞ் சாணத்தை, விவசாயிகளிடமிருந்து, 1.50 ரூபாய்க்கு வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம், வரும், 20ல் துவக்கப்பட உள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மண்புழு உரம்இங்கு, கால்நடை வளர்ப்பை லாபகரமான தொழிலாக்கும் வகையிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், 'கோதான் நியாய் யோஜனா' என்ற திட்டம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து பசுஞ் சாணத்தை விலைக்கு வாங்கி, அவற்றின் வாயிலாக மண்புழு உரம் தயாரித்து, அவற்றை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து, பசுஞ் சாணத்தை என்ன விலைக்கு வாங்குவது என்பது குறித்து, சத்தீஸ்கர் மாநில விவசாய துறை அமைச்சர் ரவீந்திர சவுபே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, தன் முடிவை நேற்று அறிவித்தது. இதன்படி, 1 கிலோ பசுஞ்சாணம், 1.50 ரூபாய்க்கு வாங்கப்படும். கால்நடை வளர்ப்போர், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இந்த சாணத்துக்கு, மாதத்துக்கு இரு முறை பணம் வழங்கப்படும்.
COMMENTS