சென்னையில் திடீரென பெய்த பலத்த மழையால் 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னை புறநகா் பகுதிகளில் இன்று மாலை பலத்த சூறைக்காற்று,இடி மின்னலுடன் பெய்த மழையால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு.ஹைதராபாத்திலிருந்து 220 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,மதுரையிலிருந்து 75 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,வாரணாசியிலிருந்து 78 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் பலத்த மழை,சூறைக்காற்று காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.அதைப்போல் 45 பயணிகளுடன் டில்லியிலிருந்து வந்த விமானமும்,69 பயணிகளுடன் தூத்துக்குடியிலிருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரமாக வட்டமடித்தன.அதன் பின்பு மாலை5.30 மணிக்கு மேல் மழையின் வேகம் குறைந்ததும் சென்னையில் தரையிறங்கின.அதைப்போல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்களும் இரவு 7 மணிக்கு மேல் ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு திரும்பி வந்தன.
COMMENTS