நாடு முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும்,
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தொடரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூட்டங்கள் செயல்பட அனுமதி
பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்காது; திரையரங்கம், மதுக்கூடங்கள் செயல்பட தடை நீடிக்கும் -
உள்துறை அமைச்சகம்
சுதந்திர தின விழா, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற அனுமதி - உள்துறை அமைச்சகம்
மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மெட்ரோ ரயில்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை தொடரும் - உள்துறை அமைச்சகம்
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி; இ-பாஸ் தேவையில்லை - உள்துறை அமைச்சகம்
65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் - உள்துறை அமைச்சகம்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை முழுமையாக கடைபிடிக்கப்படும்; கட்டுப்பாட்டு பகுதிகள் எவை என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும் - உள்துறை அமைச்சகம்
சமூக இடைவெளியை கடைபிடித்து, கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - உள்துறை அமைச்சகம்
COMMENTS