சேலத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 58 பேருக்கு கொரோனா
🔲சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ந்தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அரசின் ஊரடங்கு விதிமுறைப்படி துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
🔲ஆனால் அவரது இறுதி சடங்கில் அரசின் விதி முறைகளை மீறி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கிராமம் முழுவதும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது.
🔲அப்போது, இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
🔲ஒரே கிராமத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
COMMENTS