பொன்னமராவதியில் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் வழங்கனர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு தமிழ்க்கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை கண்டிக்கும் விதமாக பொன்னமராவதியில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் ஆகியவை வழங்கியும் இந்து முன்னனியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்விற்கு பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் சேதுமலையாண்டி மற்றும் இந்துமுன்னனி பொறுப்பாளர் ராஜா ஆகியோர் தலைமைவகித்தனர். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொன்னமராவதி பேருந்து நிலையம் அண்ணாசாலை பகுதியில் தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்தி வலைதளங்களில் பதிவிட்ட கறுப்பர் கூட்டம் போன்ற இந்து விரோத தீயசக்திகளை முறியடிக்க இந்துக்கள் ஒன்றுபடவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாஜக சார்பில் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள், முகக்கவசம் ஆகியவை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மேலும் இதில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன், பாஜக நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு சரவணன், பொருளாளர் ராஜ்குமார் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி நவமணி சண்முகம், ராம்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
COMMENTS