பொன்னமராவதி அருகே சென்னையில் இறந்த பெண்ணின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்த கணவர் கொரோனாவுக்கு பலி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மதியானி கிராமத்தை சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் சென்னையில் இறந்தார் . அவ ரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய அவரது கணவர் உள்பட 8 பேர் மதியானி கிரா மத்திற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்தனர் . இறந்தவரின் இறுதிச்சடங்கில் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் இறந்த பெண்ணின் உடலுடன் வந்த உறவினர்கள் 8 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது . இதையடுத்து 8 பேரும் சிகிச் சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . இந்த நிலையில் இறந்த பெண்ணின் கணவரான 72 வயது முதியவர் நேற்று காலை இறந்தார் . அவர் ஏற்கனவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டி ருந்தார் . இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் இறந் தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . இதற்கி டையே மதியானி கிராமத்தில் 110 பேருக்கு ரத்த மாதிரி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் உள்ள பரிசோதனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது . இதில் முதல்கட்ட மாக 15 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது . மேலும் நகரப்பட்டியை சேர்ந்த மருந்தாளுனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள் ளது . அவர் ஏம்பல் அருகே கொப்பணாம்பட்டி யில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது..
COMMENTS