தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கபிடிக்கப்படுகிறது.
அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிறான நாளை (12-ம் தேதி) மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே இன்று இயங்கும். காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும். இதே போல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும். மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம் போல செயல்படும்.
தமிழகத்தில், நாளை (12-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
COMMENTS