பொன்னமராவதி ஜூலை- 23
பொன்னமராவதியில் சைன் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சைன் லயன் சங்கத்தின் 2020-21 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு உடனடி முன்னாள் தலைவர் சோலையப்பன் தலைமை வகித்தார். உடனடி செயலாளர் சக்திவேல், பொருளாளர் மனமுகந்தராஜா, நிர்வாக் அலுவலர் தர்மராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 2020- 21 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவராக வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் அமலாஜோசப், செயலாளர் கார்த்திக், பொருளாளர் சுரேஷ், ஆகியோரை முன்னாள் மாவட்ட ஆளுநர் சேக் தாவூத் அவர்கள் பணியில் அமர்த்தி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் காரையூரில் உள்ள இலங்கை முகாமில் வசிக்கும் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார். மேலும் இவ்விழாவில் மண்டலத்தலைவர் எழிலரசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சந்திரன், வட்டாரத்தலைவர் விஜயரெங்கன் மற்றும் பொன்னமராவதி அனைத்து சேவை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
COMMENTS