நாகர்கோவில் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் பதுங்கிய பாம்பு
நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துகோணம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு பில்லர் போடுவதற்கு குழி தோண்டி வேலை நடந்து வருகிறது. வழக்கமாக வேலை செய்ய காலையில் சென்றபோது பில்லருக்காக தோண்டி குழியில் பாம்பு இருப்பதை பார்த்து உள்ளார். உடனே நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குழியில் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
COMMENTS