பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் கப்கள் பேரூராட்சித் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் கப்புகள் ஆகியவை பயன்படுத்திய கடைவீதிகளில் பேரூராட்சி துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நாட்டுக்கல் பகுதிகளில் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1000 வணிக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு வணிக உரிமையாளரிடம் இனிமேல் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்கமாட்டேன் என்று உறுதிமொழி எழுத்துமூலமாக பெறப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சிகளின் திருச்சிராப்பள்ளி மண்டலம் பொறுப்பு உதவி இயக்குநர் பார்வையிட்டு செயல் அலுவலருக்கு அடிக்கடி ரெய்டு நடத்தி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா பேரூராட்சியாக மாற்ற அறிவுரைகள் கூறினார்
COMMENTS