தங்க மாஸ்க்
கொரோனா நோயில் இருந்து பாதுகாக்க தங்க மாஸ்க் தயாரித்து அணிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் ஷங்கர் குரேட் என்பவர் தங்க நகைகளின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் 2.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் உருவாக்கப்பட்ட மாஸ்க் தயாரித்து பயன்படுத்தி வருகிறார். அதை அணிவதிலும் சுவாசிப்பதிலும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நோயில் இருந்து பாதுகாக்குமா என தெரியவில்லை. இவரது செயலை இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
COMMENTS