🔲டில்லியில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியிருந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரமாக இருப்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
🔲டில்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 3,067 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று (ஜூலை 6) வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பேசிய கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
🔲 'கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான மீதமுள்ள 25 ஆயிரம் நோயாளிகளில் 15 ஆயிரம் பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதமும் குறைய துவங்கியுள்ளது.
🔲நாட்டிலேயே முதல் பிளாஸ்மா வங்கியை துவங்கியுள்ளோம். பிளாஸ்மா சிகிச்சை மூலம் மிதமான கொரோனா பாதிப்புள்ள நோயாளிகள் கணிசமாக குணமடைய உதவியிருப்பதை நம் சோதனை முடிவுகள் காட்டுகிறது. பிளாஸ்மா தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை தானம் செய்ய முன்வருபவர்களை விட அதிகம். தகுதியுள்ள அனைவருமே முன் வந்து பிளாஸ்மா தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
🔲இது எந்த வலியையும் பலவீனத்தையும் ஏற்படுத்தாது. பிளாஸ்மாவை நன்கொடை அளிப்பவர்கள் சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவை செய்பவர்கள்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
COMMENTS