பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராட்டி ஊராட்சி மன்றம் கவுரவிப்பு...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக ஏழு தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊராட்சியின் தூய்மைப் பணியை மேற்கொள்வதில் தங்களது சிறப்பான சேவையை வெளிப்படுத்தி வரும் இவர்கள் ஒலியமங்கலம் ஊராட்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களது உயிரையும் துச்சமென மதித்து ஒவ்வொருநாளும் கிருமி நாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், கழிவுகளை அகற்றுதல், உள்ளிட்ட தூய்மைப் பணிகளை சிறந்த முறையில் செய்து வருகின்றனர். அவர்களின் சிறந்த சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் ₹1000 வீதம் 25 கிலோ அரிசிப்பை (மொத்த மதிப்பு-₹7000) இன்று 29.07.2020 ஊராட்சி மன்ற நிர்வாகிகள்தங்களது சொந்த செலவில் வழங்கினர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. சி.சோலையம்மாள் அவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு.ப.சுரேஷ் அவர்கள், ஊராட்சி மன்ற செயலர் திரு.கணேஷ் அவர்கள் மற்றும் அனைத்துவார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
திருமலை நாகராஜன்
பொன்னமராவதி
COMMENTS