🔲கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பிரதான ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில், நேற்று, 3 வயது மதிக்கத்தக்க பெண் மயில், சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
🔲அங்கு சென்ற போலீஸ் ஒருவர் தன்னார்வலர்களுடன் இணைந்து, உயிரிழந்த மயிலின் சடலத்தை மீட்டு, ரோட்டோரத்தில் வைத்து, அதன் மீது தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். பின், உயிரிழந்த மயிலின் சடலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
🔲இதுகுறித்த படங்களும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
'நாட்டின் தேசியப் பறவை என்றாலும் உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடியை போர்த்தியது தவறு. அதையும் மீறி போர்த்துவது என்றால், முறையாக சடலம் வைக்கப்பட்ட பெட்டியின் மீது தான் போர்த்தியிருக்க வேண்டும்.
🔲 அதை விடுத்து, சாலையில் மயிலின் சடலத்தை வைத்து தேசியக் கொடியை போர்த்தியதும், பின்னர் கொடியோடு உடலை சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத்துறையிடம் ஒப்படைத்ததும் விதிமீறல். தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்' என, சர்ச்சை எழுந்தது.
🔲இவ்விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து இதுகுறித்து சம்மந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடக்கிறது.
🔲இவ்விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
COMMENTS