கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது: விஜயபாஸ்கர்
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதனால் ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கு ஏற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு ‛ஆரோக்கியம்' திட்டத்தினை ஏப்.,23ல் முதல்வர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது.
COMMENTS