பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொன்னமராவதி வர்த்தகர் கழக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வர்த்தகர் சங்க தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் அப்துல்லா, பொருளாளர் தேனப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் 08.08.2020 சனிக் கிழமை முதல் 12.08.2020 புதன் கிழமை வரை ஐந்து நாட்களுக்கு (மெடிக்கல், பால் கடைகள் தவிர) அனைத்து கடைகளும் முழு கடையைப்பு செய்வது என தீர்மானம் செய்யப் பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முழு கடயடைப்பிற்கு பொன்னமராவதி வர்த்தகர் சங்க வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் மணிமுத்து, அய்யப்பா ராமசாமி, அருணாச்சலம், சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமலை நாகராஜன்
பொன்னமராவதி
COMMENTS