கேரளா விமான விபத்து 7.40 AM
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் விமானி உள்ளிட்ட 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரகத்தை சேர்ந்த் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணியளவில் அந்த விமானம் தரையிறங்கிய போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஓடு பாதையில் இருந்து சறுக்கிய விமானம் அருகில் இருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
ஆம்புலன்ஸ் வாகனங்களும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. இந்த விபத்தில் விமானி உள்பட 14 பேர் பலியானதாக மலப்புரம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். விபத்தில் சிக்கி விமானம் தீப்பிடிக்கவில்லை என்பதால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து பற்றி அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். தேவையான மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
விபத்து குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், கேட்டறிந்த பிரதமர் மோடி, தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
விமான விபத்து குறித்து முழு விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மங்களூரு விமான நிலையத்தை போல் கோழிக்கோடு விமான நிலையமும் டேபிள்டாப் விதத்தில், உயரமான ஒடுதள பாதை கொண்டதாகும். எனவே விமானத்தை இயக்கும் விமானிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்பு பணியில் துரிதமாக சென்று ஈடுபடுமாறு தேசியப் பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
COMMENTS