புகார் தெரிவிக்க டெலிகிராம் செயலியில் குழு: ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ., ஏற்பாடு
ஓசூர்:
ஓசூர் தொகுதி மக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்கும் வகையில், டெலிகிராம் ஆப்பில், 'மை எம்.எல்.ஏ.,- ஓசூர்' என்ற குழு உருவாக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓசூர் தொகுதி மக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்கும் வகையில், டெலிகிராம் ஆப்பில், 'மை எம்.எல்.ஏ.,- ஓசூர்' என்ற குழு உருவாக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், மூன்றரை லட்சம் பேருக்கு மேல் வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், குறைகளை ஓசூர் எம்.எல்.ஏ., சத்யா பார்வைக்கு பொதுமக்கள் கொண்டு வரும் வகையில், டெலிகிராம் ஆப்பில், 'மை எம்.எல்.ஏ.,-ஓசூர்' என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது.இதில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ., சத்யா தெரிவித்துள்ளார். மேலும், அனுப்பப்பட்ட புகார் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிவு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை மக்கள் பயன்பாட்டிற்கு தளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார்.
COMMENTS