புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு!!
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் 2019 - 20 ஆம் ஆண்டின் சங்கத் தலைவராக இருந்த ஆடிட்டர் R.தங்கதுரை அவர்களது சீரிய முயற்சியில் அறந்தாங்கி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கு சுமார் 7 லட்சம் செலவில் கட்டி வழங்கப்பட்டுள்ளது அதேபோல் அறந்தாங்கி நகர வளர்ச்சிக்காகவும் அறந்தாங்கி நகரில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாகவும் 35லட்சம் ரூபாய் மதிப்பில் நகரம் முழுவதும் 220 சிசி டிவி கேமரா அமைக்கும் பணி தொடங்கி முடிவடையும் நிலையில் பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தது பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவினால் பல குற்ற நிகழ்வுகள் தடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால் அறந்தாங்கி காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மணுவினை அறந்தை ரோட்டரி சங்க உடனடி மேனாள் தலைவர் ஆடிட்டர் R.தங்கதுரை கோரிக்கை மணுவினை வழங்கினார் உடன் மேனாள் தலைவர் ராசி L.மூர்த்தி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க துணைத் தலைவர் AMS.இப்ராஹிம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர் மனுவினை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக அனுமதி வழங்கியும் ஆவண செய்வதாக உறுதி கூறினார்.
COMMENTS