நவம்பரில் பள்ளி திறப்பு என்ற தகவல் தவறானது - அமைச்சர் செங்கோட்டையன்
நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பூசாரியூரில் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வரும் 10ம் தேதி வெளியிடுவார் என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், பெற்றோர்கள் மனநிலை அறிந்து கொரோனா தாக்கம் குறைந்த பின் முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
COMMENTS