தெரிந்து கொள்வோம்...!!!
விநோத உலகம்: சிவப்புக் கடற்கரை..!!
உலகின் மிக அழகான, கண்கவர் கடற்கரை எது தெரியுமா? சீனாவின் பன்ஜின் கடற்கரை தான்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை சிவப்புக் கம்பளத்தால் போர்த்தப் பட்டிருப்பது போல இந்தக் கடற்கரை காட்சியளிக்கும்! இதற்குக் காரணம், கடற்கரை முழுவதும் வளர்ந்திருக்கும் சிவப்புக் கடற்பாசிகள்.
இயற்கையிலேயே கடற்பாசி சிவப்பாக மாறி விடுவதாகச் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள் இந்தக் கடற்கரை மண்ணிலுள்ள உப்பும் காரத் தன்மையுமே சிவப்பு நிறத்தைத் தருகிறது என்கிறார்கள்.
பன்ஜின் சிவப்புக் கடற்கரை 51 சதுர மைல் தூரத்துக்குப் பரவியிருக்கிறது. இந்தத் தனித்துவம் மிக்க அழகிய கடற்கரையை அரசாங்கம் மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அதனால் மிகக் குறைவான இடத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். சீனாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வருகிறார்கள்.
சிவப்புக் கடற்கரை நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு அடைக்கலமும் அளிக்கிறது. இங்கே 400 வகையான விலங்குகள் வசிக்கின்றன. 250 வகை பறவைகள் வாழ்கின்றன. கிழக்கு ஆசியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள், சிவப்புக் கடற்கரையில் தங்கி, குடும்பம் நடத்துகின்றன. முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குடும்பத்துடன் கிளம்புகின்றன. இங்கே பறவைகளுக்குத் தேவையான மீன், புழு, பூச்சிகள் போன்ற உணவுகளுக்குப் பஞ்சமில்லை.
அதிகாலை சூரிய உதயத்தின் போதும், மாலை சூரியன் மறையும் போதும், சிவப்புக் கடற்கரை அற்புதமான அனுபவங்களைத் தரும். உலகின் அபூர்வக் கடற்கரையான பன்ஜின் சிவப்புக் கடற்கரை மனிதர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று..!!
விநோத உலகம்: சிவப்புக் கடற்கரை..!!
உலகின் மிக அழகான, கண்கவர் கடற்கரை எது தெரியுமா? சீனாவின் பன்ஜின் கடற்கரை தான்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை சிவப்புக் கம்பளத்தால் போர்த்தப் பட்டிருப்பது போல இந்தக் கடற்கரை காட்சியளிக்கும்! இதற்குக் காரணம், கடற்கரை முழுவதும் வளர்ந்திருக்கும் சிவப்புக் கடற்பாசிகள்.
இயற்கையிலேயே கடற்பாசி சிவப்பாக மாறி விடுவதாகச் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள் இந்தக் கடற்கரை மண்ணிலுள்ள உப்பும் காரத் தன்மையுமே சிவப்பு நிறத்தைத் தருகிறது என்கிறார்கள்.
பன்ஜின் சிவப்புக் கடற்கரை 51 சதுர மைல் தூரத்துக்குப் பரவியிருக்கிறது. இந்தத் தனித்துவம் மிக்க அழகிய கடற்கரையை அரசாங்கம் மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அதனால் மிகக் குறைவான இடத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். சீனாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வருகிறார்கள்.
சிவப்புக் கடற்கரை நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு அடைக்கலமும் அளிக்கிறது. இங்கே 400 வகையான விலங்குகள் வசிக்கின்றன. 250 வகை பறவைகள் வாழ்கின்றன. கிழக்கு ஆசியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள், சிவப்புக் கடற்கரையில் தங்கி, குடும்பம் நடத்துகின்றன. முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குடும்பத்துடன் கிளம்புகின்றன. இங்கே பறவைகளுக்குத் தேவையான மீன், புழு, பூச்சிகள் போன்ற உணவுகளுக்குப் பஞ்சமில்லை.
அதிகாலை சூரிய உதயத்தின் போதும், மாலை சூரியன் மறையும் போதும், சிவப்புக் கடற்கரை அற்புதமான அனுபவங்களைத் தரும். உலகின் அபூர்வக் கடற்கரையான பன்ஜின் சிவப்புக் கடற்கரை மனிதர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று..!!
COMMENTS