--> மலடி என்றனர் ஊரார் . மனம் தளராமல் இன்று 8000 பிள்ளைகளை வளர்த்து, 'மரங்களின் தாய்' என்று கிராமத்தாரால் கொண்டாடப்படுகிறார் . திம்மக்கா! | Whatsapp Useful Messages

மலடி என்றனர் ஊரார் . மனம் தளராமல் இன்று 8000 பிள்ளைகளை வளர்த்து, 'மரங்களின் தாய்' என்று கிராமத்தாரால் கொண்டாடப்படுகிறார் . திம்மக்கா!

மலடி என்றனர் ஊரார் . மனம் தளராமல்
இன்று 8000 பிள்ளைகளை வளர்த்து, 'மரங்களின் தாய்' என்று கிராமத்தாரால் கொண்டாடப்படுகிறார் . திம்மக்கா!

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், 
 பசுமை விழிப்புணர்வைப் பரப்புவதிலும், 
 பேணுவதிலும் கவனத்தைச் செலுத்தி 
 வாழ்ந்துவரும் 108 வயது திம்மக்கா  
 நானூறு ஆல மரங்கள் உட்பட 
 எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை 
 நட்டுள்ளார்!

2018 மார்ச் 16 ஆம் தேதியன்று டெல்லி 
 குடியரசுத்தலைவர் மாளிகையில், பத்ம 
 விருதுகள் வழங்கும் நிகழ்வில், மூதாட்டி 
 சாலுமரத திம்மக்கா அவர்களுக்கு, 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 
 அவர்கள், பத்ம ஸ்ரீ விருது வழங்கி 
 கவுரவித்தார்.

கர்நாடக மாநிலம், ஹுலிகல் கிராமத்தை 
 சேர்ந்த திம்மக்கா கடந்த 65 ஆண்டுகளாக 
 மரம் வளர்க்கும் பணியைச் செய்து 
 வருகிறார். இதுவரையில் 400 
 ஆலமரங்கள் உட்பட எட்டாயிரத்துக்கும் 
 மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். 

பதினாறாவது வயதில் இவருக்கு
 திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை 
 பிறக்கவே இல்லை. இதனால் ஊர் மக்கள் 
 குத்தல் கிண்டல் பேச்சுக்களால் இவரை 
 மலடி என புண்படுத்தினர். 

மனம் நொந்து, ஒருநாள் தற்கொலை 
 செய்து கொள்ள குளத்தில் குதித்தார் 
 திம்மக்கா. நல்லவேளை காப்பாற்றப்பட்டு 
 விட்டார். உயிர் பிழைத்து விட்ட 
 திம்மக்காவை, அழைத்து, 

அவரது கணவர் சிக்கையா, "பெயர் 
 சொல்ல வாரிசு இல்லையென்று 
 துக்கப்படாதே. ஊரார் பேச்சைக் காதில் 
 வாங்காதே. பெயர் சொல்லும்படியான 
 சமூக பணிகளை நாம் செய்வோம்.

நம் பிள்ளைகளாக மரங்களை நினை. 
 அவற்றை நட்டு வளர்ப்போம், வா!" 
 என்று உற்சாகப்படுத்தி, அழைத்தார்.

அதன்பயனாக, பொட்டல் காடாக கிடந்த, 
 அவர்கள் கிராமத்தை இணைக்கும் 
 சாலையைச் சோலைவனமாக்கிப் 
 பார்க்க விரும்பினார், திம்மக்கா. 

அந்த சாலையில், 1948ஆம் ஆண்டில் 
 கணவரின் உதவியுடன் முதலில் ஓர் 
 ஆலங்கன்றை நட்டார் திம்மக்கா. 

அது நன்றாக வளர ஆரம்பித்ததை 
 பார்த்த மகிழ்ச்சியில், ஆலங்கன்று 
 தேடி வாங்கி வந்து, 

அவர்கள் இருவரும்  நட ஆரம்பித்தார்கள். 
 குழந்தைகள் இல்லாததால், நட்ட 
 மரக்கன்றுகளையே தங்கள் 
 குழந்தைகளை போன்று பாவித்து 
 வளர்த்தனர்.

வியர்வை சிந்த தினமும் குடத்தில் 
 தண்ணீரைச் சுமந்து மரக்கன்றுகளை
  நீர் ஊற்றி வளர்த்தார் திம்மக்கா. 

இவர், மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற, 
 சில நேரங்களில், நான்கு கிலோமீட்டர் 
 தூரம் கூட நடந்து செல்வாராம். 
 இத்தம்பதியினர், ஏறக்குறைய நான்கு 
 கி.மீ. தூரம் சாலையின் இருபுறமும் 
 மரங்களை வளர்த்துள்ளனர். 

இப்போது ..,

ஊருக்குள் நுழையுமுன் வழி நெடுக 
 பச்சைப் பந்தல் போடப்பட்டிருப்பது 
 போன்று, இந்த மரங்கள் பரந்து 
 விரிந்து  காட்சி தருகின்றன.

திம்மக்காவுக்கு 105 வயது நடக்கும் 
 போது நோய் வாய்ப்பட்டு அவரது 
 கணவர் சிக்கையா திடீரென இறந்து 
 விட்டார்.

சில நாட்கள் அழுது ஓய்ந்து பிறகு ..,
 மரக்கன்றுகள் நடுவதை மீண்டும் 
 ஆரம்பித்தார் திம்மக்கா. அதன்பின் 
 இன்று வரை மரங்கள் நடுவதை 
 நிறுத்த வில்லை அவர். 

இந்த பசுமைப் பணியைப் பாராட்டி, 
 மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, மாநில 
 அரசின் விருது உட்பட, மேலும் பல்வேறு 
 விருதுகளையும் பெற்றுள்ளார், திம்மக்கா.

திம்மக்காவுக்கு இப்போது 108 
 வயதாகிறது. இன்றைக்கும் எங்கு 
 புதிதாக மரக்கன்றுகள் நடலாம் என்ற 
 சிந்தனையில், அவர் இடம் தேடி 
 அலைகிறார். 

இத்தனைக்கும், திம்மக்கா அவர்கள், 
 பள்ளி படிப்பைக்கூட முடிக்காதவர். 
 இருந்தாலும் பசுமை குறித்த  விழிப்புணர்வை பரப்ப, அதை காக்க 
 அவர் வாழ்கிறார். 

திம்மக்கா அவர்களை, அக்கிராம 
 மக்கள் ‘மரங்களின் தாய்’  என்றே 
 அன்புடன் அழைக்கின்றனர் இப்போது ..,


COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6211,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2339,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: மலடி என்றனர் ஊரார் . மனம் தளராமல் இன்று 8000 பிள்ளைகளை வளர்த்து, 'மரங்களின் தாய்' என்று கிராமத்தாரால் கொண்டாடப்படுகிறார் . திம்மக்கா!
மலடி என்றனர் ஊரார் . மனம் தளராமல் இன்று 8000 பிள்ளைகளை வளர்த்து, 'மரங்களின் தாய்' என்று கிராமத்தாரால் கொண்டாடப்படுகிறார் . திம்மக்கா!
மலடி என்றனர் ஊரார் . மனம் தளராமல் இன்று 8000 பிள்ளைகளை வளர்த்து, 'மரங்களின் தாய்' என்று கிராமத்தாரால் கொண்டாடப்படுகிறார் . திம்மக்கா! சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், பசுமை விழிப்புணர்வைப் பரப்புவதிலும், பேணுவதிலும் கவனத்தைச் செலுத்தி வாழ்ந்துவரும் 108 வயது திம்மக்கா நானூறு ஆல மரங்கள் உட்பட எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார்! 2018 மார்ச் 16 ஆம் தேதியன்று டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில், மூதாட்டி சாலுமரத திம்மக்கா அவர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். கர்நாடக மாநிலம், ஹுலிகல் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா கடந்த 65 ஆண்டுகளாக மரம் வளர்க்கும் பணியைச் செய்து வருகிறார். இதுவரையில் 400 ஆலமரங்கள் உட்பட எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். பதினாறாவது வயதில் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறக்கவே இல்லை. இதனால் ஊர் மக்கள் குத்தல் கிண்டல் பேச்சுக்களால் இவரை மலடி என புண்படுத்தினர். மனம் நொந்து, ஒருநாள் தற்கொலை செய்து கொள்ள குளத்தில் குதித்தார் திம்மக்கா. நல்லவேளை காப்பாற்றப்பட்டு விட்டார். உயிர் பிழைத்து விட்ட திம்மக்காவை, அழைத்து, அவரது கணவர் சிக்கையா, "பெயர் சொல்ல வாரிசு இல்லையென்று துக்கப்படாதே. ஊரார் பேச்சைக் காதில் வாங்காதே. பெயர் சொல்லும்படியான சமூக பணிகளை நாம் செய்வோம். நம் பிள்ளைகளாக மரங்களை நினை. அவற்றை நட்டு வளர்ப்போம், வா!" என்று உற்சாகப்படுத்தி, அழைத்தார். அதன்பயனாக, பொட்டல் காடாக கிடந்த, அவர்கள் கிராமத்தை இணைக்கும் சாலையைச் சோலைவனமாக்கிப் பார்க்க விரும்பினார், திம்மக்கா. அந்த சாலையில், 1948ஆம் ஆண்டில் கணவரின் உதவியுடன் முதலில் ஓர் ஆலங்கன்றை நட்டார் திம்மக்கா. அது நன்றாக வளர ஆரம்பித்ததை பார்த்த மகிழ்ச்சியில், ஆலங்கன்று தேடி வாங்கி வந்து, அவர்கள் இருவரும் நட ஆரம்பித்தார்கள். குழந்தைகள் இல்லாததால், நட்ட மரக்கன்றுகளையே தங்கள் குழந்தைகளை போன்று பாவித்து வளர்த்தனர். வியர்வை சிந்த தினமும் குடத்தில் தண்ணீரைச் சுமந்து மரக்கன்றுகளை நீர் ஊற்றி வளர்த்தார் திம்மக்கா. இவர், மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற, சில நேரங்களில், நான்கு கிலோமீட்டர் தூரம் கூட நடந்து செல்வாராம். இத்தம்பதியினர், ஏறக்குறைய நான்கு கி.மீ. தூரம் சாலையின் இருபுறமும் மரங்களை வளர்த்துள்ளனர். இப்போது .., ஊருக்குள் நுழையுமுன் வழி நெடுக பச்சைப் பந்தல் போடப்பட்டிருப்பது போன்று, இந்த மரங்கள் பரந்து விரிந்து காட்சி தருகின்றன. திம்மக்காவுக்கு 105 வயது நடக்கும் போது நோய் வாய்ப்பட்டு அவரது கணவர் சிக்கையா திடீரென இறந்து விட்டார். சில நாட்கள் அழுது ஓய்ந்து பிறகு .., மரக்கன்றுகள் நடுவதை மீண்டும் ஆரம்பித்தார் திம்மக்கா. அதன்பின் இன்று வரை மரங்கள் நடுவதை நிறுத்த வில்லை அவர். இந்த பசுமைப் பணியைப் பாராட்டி, மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, மாநில அரசின் விருது உட்பட, மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார், திம்மக்கா. திம்மக்காவுக்கு இப்போது 108 வயதாகிறது. இன்றைக்கும் எங்கு புதிதாக மரக்கன்றுகள் நடலாம் என்ற சிந்தனையில், அவர் இடம் தேடி அலைகிறார். இத்தனைக்கும், திம்மக்கா அவர்கள், பள்ளி படிப்பைக்கூட முடிக்காதவர். இருந்தாலும் பசுமை குறித்த விழிப்புணர்வை பரப்ப, அதை காக்க அவர் வாழ்கிறார். திம்மக்கா அவர்களை, அக்கிராம மக்கள் ‘மரங்களின் தாய்’ என்றே அன்புடன் அழைக்கின்றனர் இப்போது ..,
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWu7fwqtWz73UEdsZWvvkOrmtq2jhwv0g3VyenvAVGp63aoTYMYF01qHMLa4U-4bNYaNUPcMN83dN6uc8F1KJmYDcQGG9ThKn9nVTX-dILO5IMMyk8nCfI1xN2yzISwYI4CO9vxTvq19s/s1600/1598965527356490-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWu7fwqtWz73UEdsZWvvkOrmtq2jhwv0g3VyenvAVGp63aoTYMYF01qHMLa4U-4bNYaNUPcMN83dN6uc8F1KJmYDcQGG9ThKn9nVTX-dILO5IMMyk8nCfI1xN2yzISwYI4CO9vxTvq19s/s72-c/1598965527356490-0.png
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/09/8000.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/09/8000.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content