அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் எந்த மொழியும் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
COMMENTS