கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதா ?... சீரம் மருந்து நிறுவனத் தலைவர் கேள்வி
அடுத்த ஓராண்டிற்கான கொரோனா தடுப்பூசிகளை வாங்கவும், வினியோகிக்கவும் மத்திய அரசிடம் எண்பது ஆயிரம் கோடி ரூபாய் நிதி உள்ளதா என, சீரம் நிறுவன தலைவர் அடார் பூனாவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய தேவைக்கான தடுப்பூசியை கொள்முதல் செய்து வினியோகிப்பது தொடர்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை, திட்டமிட்டு வழிநடத்துவது அவசியம் என பதிவிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.
COMMENTS