கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு, பிரகாசம் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு
கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தெலங்கானாவின் நாகர்ஜுன சாகர், ஆந்திரத்தின் பிரகாசம் அணைகளில் இருந்து நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நல்கோண்டா மாவட்டத்தில் உள்ள நாகர்ஜுன சாகர் அணையில் 10 மதகுகளைத் திறந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புலிச்சிந்தலா அணையில் இருந்தும், முன்னேறு ஆற்றில் இருந்தும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கட்டில் இருந்து நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
COMMENTS