உலக வெறிநாய் தடுப்பு தினம் 2020!!
தமிழ்நாடு அரசு கால் நடை பராமரிப்பு துறை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உலக வெறி நாய் தடுப்பு தினம் நாய்களுக்கான இலவச வெறி நாய் தடுப்பூசி முகாம் கால் நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
Add caption |
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் டாக்டர் க. ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சுமார் 200 க்கு மேற்பட்ட நாய்களுக்கு வெறி நாய் தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டது புதுக்கோட்டை நகரம் முழுவதும் ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது முகாமில் ரோட்டரி மாவட்டம் 3000தின் மேனாள் துணை ஆளுனர்கள் மாருதி கண மோகன்ராஜ், சோ.பார்த்திபன் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப. செல்லத்துரை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அப்பு செந்தில், செல்வம் மற்றும் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அருள்செல்வி, சாகுல்ஹமீது, அரசு மருத்துவர்கள் தெட்சிணாமூர்த்தி, தினேஷ்குமார், பாண்டியராஜன்,பிரபு மற்றும் ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி அரசு வழிகாட்டலுன் முக கவசம் அணிந்து நடத்தப்பட்டது
COMMENTS