அண்ணாமலையான் புதல்வனே
ஆதிமூல முருகனே சரணம்!
அக இருள் நீக்கும்
ஆவினன் குடியோனே சரணம்!
இகபர சுகம் தரும்
இடும்பனை வென்றவனே சரணம்!
இஷ்ட தெய்வமே
இடரைக் களைவோனே சரணம்!
கார்த்திகை மைந்தனே
கவலை தீர்ப்பவனே சரணம்!
காக்கும் கடவுளே
காங்கேயனே சரணம்!
தகப்பன் சாமியே
தருமமே உருவானவனே சரணம்!
தந்தையும் நீயே
தணிகாசலனே சரணம்!
மலையில் இருப்பவனே
மருதமலையானே சரணம்!
மயில் வாகனனே
மால்மருகனே சரணம்!
பக்தருக்கு அருள்வோனே
பழநியாண்டவனே சரணம்!
பரம பவித்ரனே
பாலகுமாரனே சரணம்!
திருவருளே திருவடி
பணிந்தேன் சரணம்!
தீன கருணாகரனே
திருப்பரங்குன்றோனே சரணம்!
COMMENTS