தென் சீனக்கடலில் உருவாகிய புயல் வியாட்நம் அருகே கரையை கடக்கிறது! தென்மேற்கு பருவமழையின் இறுதிச்சுற்று இன்று துவங்குகிறது!
வளிமண்டலம் மற்றும் கடலின் இன்றைய அமைப்பு:
==> தென் சீனக்கடலில் உருவாகிய புயல் தற்போது வியாட்நம் நகருக்கு சற்று தெற்கே கரையை கடந்துக்கொண்டிருக்கிறது. இப்புயல் தாய்லாந்து கடந்து நாளை மாலை வடகிழக்கு வங்ககடல் பகுதிக்கு தாழ்வு பகுதியாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் நோக்கி வரும் தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. இந்த வாரத்தில் வங்க்கடலுக்கு புயல் வருகிறது, புயல் உருவாகிறது என வதந்தி பரப்பினால் அதனை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
==> மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது.
==> இந்த காற்று சுழற்சி இன்றும், நாளையும் நீடிக்கும் 20ம் தேதி வடகிழக்கு வங்ககடலுக்கு வருகை தரும் தாழ்வு பகுதியுடன் இணைந்துவிடும்.
==================================
==> காற்று சுழற்சி மற்றும் 20ம் தேதி வடகிழக்கு வங்ககடல் பகுதிக்கு வரும் தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும், இந்த வருடத்தில் தீவிரமான தென்மேற்கு பருவமழையின் இறுதிச்சுற்றாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.
==> இதனால் செப்டம்பர் 19,20, 21,22 ஆகிய தேதிகளில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகளில் கனமழை முதல் மிககனமழை பெய்யும்.
==> தமிழகத்தில் இன்றும், நாளையும் காற்று சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை காற்றுடன் பெய்யும்.
==> டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம் ஆனால் பரவலாக மழை வாய்ப்பு இல்லை.
==================================
#தென்மேற்கு_பருவமழை_இறுதிச்சுற்று!
செப்டம்பர் 19 முதல் 23ம் தேதி வரை 5 நாட்களில்:
==> தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் #நீலகிரி #கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும். #நீலகிரி #கோயம்புத்தூர் நகர் பகுதிகள் மற்றும் #கன்னியாகுமரி #தென்காசி #நெல்லை_மேற்கு #திண்டுக்கல் #திருப்பூர் #ஈரோடு #சேலம் #தர்மபுரி #கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழை, சாரல் மழை பெய்யும்.
==> இன்று முதல் செப்டம்பர் 23 வரை 6 நாட்களில் பெய்யும் மழையை செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சுற்று மழையாக எடுத்துக்கொள்ளலாம்.
==> இந்த சுற்றில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களும், நாளை முதல் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் நல்ல மழை பெய்யும்.
==================================
#செப்டம்பர்_மாத_நான்காவது_சுற்று_மழை!
==> தமிழகத்தின் உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வடகடலோரம் மற்றும் தென்மாவட்டங்கள் செப்டம்பர் மாதத்தின் 4வது சுற்று மழையில் நல்ல மழையை பெறும். அதாவது செப்டம்பர் 24 முதல் 30 வரை 8 நாட்களில் தமிழகம் முழுதும் பரவலாக நல்ல மழை எதிர்ப்பார்க்கலாம்.
நன்றி
டெல்டாவெதர்மேன் & அலையாத்தி செந்தில்
COMMENTS