வெப்பத்தைத் தணியுங்கள்..!!
இப்படி
அழுக்கும் உஷ்ணமும் நாளும் சேராமல் இருந்தால், நாள் தோறும் மன்னிப்பு
கேட்டு கழுவி வைக்க வேண்டிய அவசியமே இருக்காதே என்று தோன்றுகிறதா? அதுவும்
சாத்தியம் தான். மனம் கோபம் கொள்ளும் போதே, அதை உணர்ந்து மன்னிப்பு கோரி
வெளியேற்றிவிடுவது.
“நீ சொல்வதைக்
கேட்டால் எனக்குக் கோபம் வருகிறது. ஆனால், கோபம் கொள்ளுதல் என் உடலுக்கும்
நம் உறவுக்கும் நல்லதல்ல. எதை முடியுமோ அதை மட்டும் செய்யலாம். வீண்
வார்த்தைகள் வேண்டாம். நான் கோபம் கொண்டதற்கும் மன்னிப்பு கேட்கிறேன்.
நீயும் இந்தக் கோபத்திலிருந்து வெளியேறி விடுதலை கொள்!” என்று அந்த
நொடியிலேயே விழிப்புணர்வுடன் பிரார்த்திக்கலாம்.
எப்படி
அந்த விழிப்புணர்வை அடைவது? தியானம் தான் அதற்குச் சிறந்த வழி. அந்த அளவு
விழிப்புணர்வு வரும் வரை தினசரி மன்னிப்புக் கோருதல் அவசியமாகிறது..!!
COMMENTS