மறந்த தமிழ் சொல் இன்று.
நல்லவர்கள் நடுவிலேயும் நல்லவன் எனப் பெயர் பெறுதலும், நண்பர்களிடையேயும் சிறந்த நண்பன் எனப் பெயர் பெறுதலும், கோபம் கொண்டு பாய்பவர்கள் மீதும் ஏற்புடைய சொற்களை மட்டுமே கூறுவதும் அனைவர்க்கும் நல்லவன் எனப்படும் ஒருவனின் நெறிமுறைகள் ஆகும் எனத் திரிகடுகம் கூறுகின்றது.
தோய்தல் என்னும் சொல்லுக்குப் படிதல், நனைதல், அணைதல், முழுகுதல், (தயிர்)உறைதல் போன்ற பல பொருள்கள் உள்ளன. இப்பாடலில் நட்புக் கொள்ளுதல் என்னும் பொருள் பொருத்தமாக அமைகின்றது. தமிழ் என்றும் இனியது.
COMMENTS