கொரோனாவை கட்டுப்படுத்த, இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கு அமல்..!
இஸ்ரேலில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரண்டாவது முறையாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், தினமும் கொரோனா பாதிப்புகள் ஒற்றை இலக்க எண்ணில் இருந்ததால், ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டுப்பாடுகளின்றி பலர் கூடியதால், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5000-ஐ கடந்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல், யூதர்களின் வருடப்பிறப்பு உள்ளிட்ட திருவிழாக்கள் அடுத்தடுத்து வர உள்ளதால், 3 வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அவசியமின்றி, பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு 500 மீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
COMMENTS